செம்மொழியான தமிழ் மொழி தினம் கொண்டாட திட்டம் !

அக்டோபர் 12ம் தேதி செம்மொழியான தமிழ் மொழி தினமாக கொண்டாட முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக அமைச்சர் தமிழக தொழில் துறை மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியது,
அக்டோபர் 12 ஆம் தேதி செம்மொழியான தமிழ் மொழி தினமாக கொண்டாட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கீழடி, அகரம், மணச்சநல்லூர், மாங்குளம் ஆகிய பகுதியில் கிடைத்த அகல்வாராய்ச்சி பொருட்கள் தமிழ் சமூகத்தின் தொன்மை வரலாற்றை நிரூபிக்கின்றது.

மாங்குளத்தில் கிடைத்த பரிசு பொருட்கள் கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தெரிய வருகிறது. இதேபோல், கிமு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ் சமூகம் நாகரிகமாக செயல்பட்டுள்ளது என தெரியவருகிறது.தமிழ் தமிழர்களுடைய பண்பாடு நாகரீகத்தை புறக்கணிக்க முடியாது என்று தெரிவித்தார்.