இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் படி,பிஎஸ்இ சென்செக்ஸ் 568.38 புள்ளிகள் அல்லது 1.17 சதவீதம் அதிகரித்து 49,008.50 புள்ளிகளாக முடிவடைந்தது.மற்றும் ன்எஸ்இ நிஃப்டி 182.40 புள்ளிகள் அல்லது 1.27 சதவீதம் உயர்ந்து 14,507.30 புள்ளிகளாக உள்ளது.

மேலும் கச்சா எண்ணெய்யின் மதிப்பு பீப்பாய்க்கு 2.10 சதவீதம் உயர்ந்து 63.25 அமெரிக்க டாலராக உள்ளது.மேலும் டாலருக்கான இந்திய மதிப்பு 11 பைசா உயர்ந்து வியாழக்கிழமை, ரூபாய் 72.62 ஆக உள்ளது.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் ஒவ்வொன்றும் ஒரு சதவீதத்திற்கு மேல் உயர்வை பெற்றன.மேலும் டாடா குழும நிறுவனங்களின் பங்கு விலைகள் இன்று டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் 6 சதவிகிதம் வரை உயர்ந்தது.