இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !

sensex and nifty
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இன்றைய பங்குச்சந்தை முடிவில் பிஎஸ்இ சென்செக்ஸ் 393 புள்ளிகள் அல்லது 0.75 சதவீதம் உயர்ந்து 52,699 புள்ளிகளாக முடிவடைந்தது.மேலும் நிஃப்டி 50 குறியீடு 103 புள்ளிகள் அல்லது 0.66 சதவீதம் அதிகரித்து 15,790 ஆக முடிந்தது.

இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை உயர்வை சந்தித்தன.ஆர்.ஐ.எல் தவிர, பாரதி ஏர்டெல் மற்றும் பவர் கிரிட் ஆகியவை பங்குகள் குறைந்து காணப்பட்டன.

இன்றைய பங்குச்சந்தை முடிவில் நிஃப்டி துறை குறியீடுகள் 2.79 சதவீதம் உயர்ந்து, லாபத்தை ஈட்டியுள்ளன, அதே நேரத்தில் நிஃப்டி பி.எஸ்.யூ வங்கி குறியீடு 1.4 சதவீதம் குறைந்து காணப்பட்டன.