இன்றைய ராசி பலன்

உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பிரச்சனைகளை சமாளிப்பதற்கான சில உத்திகளைக் கையாள்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பை பெறுவார்கள். பெண்களுக்கு குழப்பம் தீரும். ஹயக்ரீவர் வழிபாடு செய்வது நல்லது.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் செயலுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதற்கு முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். குருவாயூரப்பா இறை வழிபாடு செய்வது நல்லது.

மிதுனம்:

உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய சக பணியாளர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நன்மையை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் ஜாமீன் கையெழுத்து போடுவதோ எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண்களுக்கு பொறுமை தேவைப்படக்கூடிய நாள். தன்வந்திரி பகவானை வழிபட ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு சிலர் இடையூறுகள் விளைவிப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முனைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு மதிப்பு உயரும். அங்காள பரமேஸ்வரியை வழிபட நல்லது நடக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உங்களுடைய இலக்கை நோக்கி பயணம் செய்வீர்கள். நண்பர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்க பெறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பார்கள் பல ரீதியான விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. பெண்கள் புதிய கடன்கள் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். கணபதி வழிபாடு செய்ய நல்லது நடக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உங்களுடைய பாதையை மாற்றிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் வாய்ப்புகள் உண்டு. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைத்து அதை தவிர்ப்பது உத்தமம். முருகன் வழிபாடு செய்து வர நன்மைகள் நடக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய விடா முயற்சிக்கும் உரிய பலன்களை காணும் நேரம் இது. உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய திறமைக்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நட்பு வட்டம் விரியும். கணவன் மனைவி இடையே இருக்கும் உறவு சிக்கல்கள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை மேலோங்கி காணப்படும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடு செய்வதன் மூலம் மன அமைதி காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத டென்ஷன் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் இழுபறியில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும் கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன்-மனைவி இடையே பரஸ்பர அன்னோன்யம் அதிகரிக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நன்மைகள் காணலாம்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் வகையில் சுப காரியங்கள் கைகூடி வரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும் எச்சரிக்கையாக எடுத்து வைப்பது நல்லது. தேவையில்லாத பழிகளை சுமப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது தொழிலுக்கு ஏற்றம் தரும் வகையில் அமையும். கணவன் மனைவி இடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிராக செயல்படுபவர்களின் சூழ்ச்சியை முறியடித்து காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். மேலதிகாரிகளின் தொந்தரவும் குறையும். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உழைப்பாளர்களுக்கு உரிய ஊதியம் கொடுத்தால் முன்னேற்றம் காணலாம். பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். கிருஷ்ண வழிபாடு செய்துவர நன்மை பிறக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான பேச்சால் நல்ல விஷயங்களை அடைவீர்கள். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களை சுற்றியுள்ளவர்களின் உண்மையான குணநலன்களை புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் உங்களுக்கு நெருக்கமானவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். பெண்களுக்கு வெற்றி கிடைக்கும். சக்கரத்தாழ்வாரை வழிபட நன்மை நடக்கும்.