இன்று 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுகிறது – கேரளா !

இன்று கேரளாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தற்போது நடந்த தேர்தலை முன்னிட்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.இதனையடுத்து ஏப்ரல் 2வது வாரம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று அந்த தேர்வு நடைபெறுகிறது.

மாணவர்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டு உள்ள ட்விட்டர் செய்தியில், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன.

கரோனா விதிமுறைகளை அனைத்து மாணவ மாணவியர்களும் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அதனால், உங்களுடைய நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர் பாதுகாப்புடன் இருக்க முடியும். அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.