ஐஐடி மாணவர்களுக்கு பரவும் கரோனா !

ஹரித்வார் மாவட்டத்தின் ரூர்க்கியில் உள்ள ஐஐடி யில் 88 மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் ,பாதிக்கப்பட்ட 88 மாணவர்களும் ஐ.ஐ.டி வளாகத்திற்குள் உள்ள கங்கா ஹாஸ்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இது சிறப்பு கரோனா பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஹரித்வார் மருத்துவ அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஐஐடி யில் உள்ள ஐந்து விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஐஐடி ரூர்க்கியின் ஆன்லைன் வகுப்புகளில் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.