மீண்டும் தமிழகத்தில் இ-பாஸ் முறை !

கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கிய நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தீவர கண்காணிப்பு பிறகே அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேருக்கு மட்டுமே அனுமதி. திருமண விழாவில் அதிகபட்சமாக 100 பேர் மற்றும் இறுதி சடங்குகளில் 50 பேருக்கு மட்டுமே பங்கேற்க அனுமதி.பூங்காவில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது.