தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு கரோனா தொற்று !

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நடந்தது.தற்போது,தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கரோனா தடுப்பூசியையும் அவர் செலுத்திக்கொண்டார். இருப்பினும், சுஷில் சந்திராவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரும் 12ம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில், அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா 13-ம் தேதி பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தொற்று பாதிப்பால் வீட்டிலிருந்தே பணியாற்றுவதாக சுஷில் சந்திரா அறிவித்துள்ளார்.