சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.
பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து ரூ.94.31க்கும், டீசல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து ரூ.88.07 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.