கரோனா பொதுநிதிக்காக ரூபாய் 25 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் !

கரோனா தொற்று தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் ,பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூபாய் 25 லட்சம் வழங்கி இருக்கிறார்.

மேலும் ,இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 25 லட்சம் ரூபாய், நடிகர் அஜித் ஆன்லைன் மூலம் 25 லட்சம் ரூபாய், இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் ரூபாய், இயக்குனர் வெற்றிமாறன் 10 லட்சம் ரூபாய் அளித்துள்ளனர்.