காங்கிரஸ் எம்பி கரோனாவால் காலமானார் !

மகாராஷ்ரா மாநிலம் புனேவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சாதவ்.கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அவர் புனேவில் உள்ள ஜகாங்கீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஐசியூவில் வெண்டிலேட்டர் உதவியுடன் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இன்று காலை 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரது மறைவிற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தனது டுவிட்டரில் ,என் நண்பர் ராஜீவ் சாதவின் இழப்பு வருத்தம் அளிக்கிறது.

அதிக ஆற்றல் கொண்ட, காங்கிரஸ் கொள்கைகளுடன் பிணைந்த அரசியல் தலைவர் ராஜீவ் சாதவ். இவரின் மறைவு நமக்கு பெரிய இழப்பு. அவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.