நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர்.இதில் தங்கம் மீது மக்கள் அதிகம் ஆர்வம் கொள்கின்றனர்.
ஒரு நெருக்கடியான சூழலில் தங்கம் இருந்தால் பணம் ஈட்டிக்கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள்.தற்போது கரோனா தொற்று இருக்கும் இந்த சூழலில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது.
இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,784-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 28 ரூபாய் உயர்ந்து, ரூ.4,598-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 76,900 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து ரூ.76,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.