தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை மே 24 வரை அறிவித்துள்ளது.மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது இந்த பொதுமுடக்கம் நீடிக்கப்படலாம் என்று கூறுகின்றனர்.தமிழகத்தில் கரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
தற்போது முழு முடக்கம் மே மாத இறுதி வரை அல்லது ஜூன் முதல் வாரம் வரையிலும் நீட்டிக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தமிழகத்தில் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.