கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாரின் தந்தை காலமானார் !

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் தந்தை காலமானார்.63 வயதான அவர் புற்றுநோய்க்கான கீமோதெரபி எடுத்துக்கொண்டுள்ளார் .

மேலும் அவருக்கு கல்லீரல் வியாதிகளும் இருந்தன, ஆனால் அவரது உடல்நிலை இரண்டு வாரங்களுக்கு முன்பு மோசமடைந்தது.அவர் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்தவர்.

புவனேஷ்குமார் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளாததால் தற்போது உத்தரப்பிரதேசத்தில் உள்ளார். புவனேஷ்குமாரின் தந்தை மறைவுக்கு சக வீரர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.