தமிழகத்தில் இன்று 1,575 பேருக்கு கொரோனா பாதிப்பு !

தமிழகத்தில் ஒரேநாளில் 1,575 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் இன்று 20 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,000 ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 17 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 நபரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,575 பேருக்குக் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,21,086. ஆக உள்ளது.இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,68,161.ஆக உள்ளது.