டோக்கியோ பாராலிம்பிக்ஸ்:பாட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெண்கலம் !

டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை இந்தியா 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் உட்பட 17 பதக்கங்களை வென்றுள்ளது.தரவரிசை பட்டியலில் இந்தியா 26 வது இடத்தில் உள்ளது.

இந்தியாவை சேர்ந்த 54 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.இந்த முறை இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோகத் பாகத் தங்கப் பதக்கத்தையும், மனோஜ் சர்க்கார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.பரபரப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில் டேனியல் பெத்தலை 21-14, 21-17 என்ற நேர்செட்களில் தோற்கடித்து இந்திய வீரர் பிரமோத் பாகத் தங்கப் பதக்கம் வென்றார்.

மனோஜ் சர்க்காரை எதிர்த்து ஜப்பான் வீரர் டாய்சுகே புஜிஹாரா விளையாடினர் . இதில் புஜிஹராவை 22-20, 21-13 என்ற நேர் செட்களில் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை மனோஜ் சர்க்கார் உறுதி செய்தார்.