தமிழகத்தில் இன்று 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு !

தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் ஒரேநாளில் 1,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் இன்று 19 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,980 ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 16 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 நபரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,568 பேருக்குக் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,19,511. ஆக உள்ளது.இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,66,161.ஆக உள்ளது.