நடிகை மீரா மிதுன் நீதிபதி முன்பு கதறி அழுதார் !

மீரா மிதுன் இவர் விஜய் டிவி யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்.சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசிவந்தார்.

சமீபத்தில் இவர் பட்டியலின மக்கள் குறித்து பேசியது கடும் சர்ச்சைக்குள்ளானது. இதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார்கள் எழுந்தன.மிக இழிவாக பேசிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

மேலும் 2019 ஆம் ஆண்டு எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியின் மேலாளரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார் மீரா மிதுன். அப்போது அவர் நீதிபதியிடம், போலீசார் தன் மீது வழக்குகள் போட்டு தற்கொலைக்கு தூண்டுவதாக புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வழக்குகள் குறித்து தன்னிடம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும், தன் சார்பாக வாதாட வழக்கறிஞர் வரவில்லை எனவும் நீதிபதியிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.மீரா மிதுன் மீது மொத்தமுள்ள நான்கு வழக்குகளில் இதுவரை 3 வழக்குகளில் மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.