மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ற நாவலுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

இதேபோல் இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கு (யுவ புரஸ்கார்) சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்த விருது பெறுபவர்களுக்கு செப்புப் பட்டயத்துடன் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்படும்.இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் எழுத்தாளர் எஸ்.பால பாரதியின் மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாதமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது