இன்று தமிழகத்தில் 4,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி !

national news : மக்களே உஷார்..அடுத்த இரண்டு வாரங்களுக்கு அதிகரிக்கும் கொரோனா
மக்களே உஷார்..அடுத்த இரண்டு வாரங்களுக்கு அதிகரிக்கும் கொரோனா

கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கிய நிலையில் நாளைக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில் அரசு மக்களுக்கு தடுப்பூசி செலுத்த முற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று 3,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,11,110ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரத்து 546ஆக அதிகரித்துள்ளது.தற்போது வரையில் தமிழகத்தில் மொத்தம் 27,743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.