கரோனா தொற்றின் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ளது.நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.தற்போது பாதிப்பு மேலும் அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்த செய்திக்குறிப்பில் ஏப்ரல் 19 முதல் 18 வயது பூர்த்தியான அனைவரும் ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இனி குழப்பம் விளைவிக்கும் விதிகளோ, கட்டுப்பாடுகளோ கிடையாது அதற்கு முன் நாட்டிலுள்ள மூத்த குடிமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது 45 வயதை கடந்தவர்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.மக்கள் அணைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வத்துடன் வர வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.