கரோனா பாதிப்பு நீங்கி நலமாக வீடு திரும்பினார் – கனிமொழி !

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாக தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக எம்.பி கனிமொழி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்தநிலையல், அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதற்கு மாலை 6 மணி முதல் 7 மணிவரையில் வாக்கு அளிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. கரோனா கவச உடையணிந்து வந்த கனிமொழி வாக்களித்தார்.

மேலும் இன்று கரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அவரை 5 நாள்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.