12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடக்கும் !

கரோனா தொற்று காரணமாக மார்ச் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

தற்போது கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கி உள்ளது.மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகம் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை கூறியது,இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே மாதம் அறிவித்தபடி நடைபெறும் என தெரிவித்துள்ளது. மேலும் தேர்வுகள் தொடங்க உள்ள மே 3ஆம் தேதிக்கு பதிலாக ஒரு வார காலம் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருகின்றது.

ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 35 சதவிகித பாடப்பகுதிகள் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.