தமிழகத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம் !

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதனை தடுக்க தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா தொற்றின் நாள் பாதிப்பு குறையத்தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் இன்று 1,808 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,48,497. ஆக உள்ளது.மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 24,91,222. ஆக உள்ளது.

சென்னையில் 126 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.மேலும் இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 22 பேர் உயிரிழந்தனர். என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.