தொடங்குகிறது பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.மேலும் மாணவர்களின் நலன் கருதி அணைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.

தற்போது தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கலந்தாய்வுக்கு நாளை முதல் வரும் ஆகஸ்ட் 24ம் தேதி வரை www.tneaonline.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் தான் +2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் தற்போது பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பி.இ., பி.டெக். போன்ற பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 25 ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் என்றும் செப்டம்பர் 4ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.