இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் பலி !

இமச்சால பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.கின்னார் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பல நிலச்சரிவுகளில் குறைந்தது 9 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.

சுற்றுலாப் பயணிகள் ஒரு வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்மலையிலிருந்து பெரிய பாறை உருண்டு விழுந்ததில், டெம்போவில் பயணித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், பாறைகள் விழுந்ததில் அங்கிருந்த பாலம் ஒன்று, தரைமட்டமானது.

நிலச்சரிவில் சுற்றுலாப் பயணிகள் இறந்ததற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளது.மேலும் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் என அறிவித்துள்ளார்.மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ .50 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.