தமிழகத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம் !

சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்
சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வெகுவாக பாதித்தது.இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அமலில் வைத்துள்ளது.மேலும் இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் கொரோனா தொற்றின் நாள் பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 1,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் சென்னையில் இன்று 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,44,870. ஆக உள்ளது.மேலும் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 24,86,192. ஆக உள்ளது.

இதுவரை மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 14,86,933 பேர். பெண்கள் 10,57,899 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 38 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 24 பேர் உயிரிழந்தனர்.என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.மேலும் கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது மிக அவசியம்.