கடந்த 24 மணி நேரத்தில் 30,016 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 30,016 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 486 பேர் உயிரிழந்து உள்ளனர்.

31,759 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 74,349 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 30,016 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,39,716 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,73,38,092 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.