கடந்த 24 மணிநேரத்தில் 1,697 பேருக்கு கொரோனா !

தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் நேற்று 1,519 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 1,697 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

1,56,850 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 1,697ஆக உள்ளது. சென்னையில் இன்று 232 ஆக தொற்று எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

கொரோனாவால் இன்று 27 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,337ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 24 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 26,45,380. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,47,705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : நவம்பர் முதல் திறக்கப்படும் பள்ளிகள் !