பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி !

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார்.மேலும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்.

இன்னும் 5 மாதங்களில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார்.

தற்போது புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாக இன்று மாலை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த செய்தியை காங்கிரஸ் மூத்த தலைவரும் ஹரிஷ் ராவத் தனது ட்விட்டரில் வெளியிட்டார்.

இது குறித்து அவர் கூறியுள்ளது,பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிவிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று ஹரிஷ் ராவத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : கடந்த 24 மணிநேரத்தில் 1,697 பேருக்கு கொரோனா !