நவம்பர் முதல் திறக்கப்படும் பள்ளிகள் !

கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன.

மேலும் பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.கர்நாடகா,பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.மேலும் தமிழகத்திலும் செப் 1 முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

தற்போது கேரளா மாநிலத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை பெரிதும் தாக்கியது.இதில் கேரளா மாநிலம் மிக பெரிய பாதிப்பை சந்தித்தது.தற்போது கேரளாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை மிக சொற்பமே குறைந்துள்ளது.

இதையும் படிங்க :உங்களிடம் பழைய நாணயங்கள் உள்ளதா பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் !