கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கிய நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தடுப்பூசியை போட்டுக்கொள்ள அரசு அறிவுறுத்திவருகிறது.
இன்று தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனாவுக்கு மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மொத்த பாதிப்பு 9,33,434 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை மொத்தம் 8,78,571 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.