தமிழகத்தில் இன்று 1,804 பேருக்கு கொரோனா பாதிப்பு !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் அதிகம் பரவியது.இதனை தடுக்க அரசு ஊரடங்கு பிறப்பித்தது.இந்த ஊரடங்கில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இன்று தமிழகத்தில் 1,804 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,92,436. ஆக உள்ளது.மேலும் சென்னையில் இன்று 209 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,37,632.ஆக உள்ளது.இன்று தொற்றினால் 32 பேர் உயிரிழந்தனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.