சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. மக்கள் வேதனை !

மக்களின் அத்தியாவசிய பொருட்களுள் ஒன்றாக இருப்பது சமையல் எரிவாயு சிலிண்டர்.இதன் விலை ஏறிக்கொண்டே போவதால் நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வைத்துத் தான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

பிப்ரவரி மாதத்தில் 700 ரூபாய் அளவில் இருந்த சமையல் எரிவாயு விலை 25 ரூபாய், 50 ரூபாய் என உயர்ந்து 825 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது ,சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை 875 ரூபாய் 50 காசாக அதிகரித்துள்ளது. நடுத்தர குடும்பங்களுக்கு இந்த விலை ஏற்றம் மிகவும் கவலையளிக்கிறது.