தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்று !

மாஸ்க் போடலனா இனி அபராதம் கிடையாது
மாஸ்க் போடலனா இனி அபராதம் கிடையாது

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்க தொடங்கியது நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து சென்றது.இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் தனி தனியே ஊரடங்கை அறிவித்தன.

இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.தமிழகத்தில் இன்று 6,596 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

சென்னையில் 396 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 6,200 பேருக்குத் தொற்று உள்ளது.

தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,709 பேர். பெண்கள் 2,887 பேர்.இன்று கொரோனாநோய்த் தொற்றினால் 166 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.