இன்றைய கரோனா பாதிப்பு – தமிழகம் !

national news : மக்களே உஷார்..அடுத்த இரண்டு வாரங்களுக்கு அதிகரிக்கும் கொரோனா
மக்களே உஷார்..அடுத்த இரண்டு வாரங்களுக்கு அதிகரிக்கும் கொரோனா

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில்ல புதிய உச்சமாக தமிழகத்தில் 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதில் தமிழகத்தில் 13,732 நபர்களும், வெளிமாநிலங்களில் வந்த 44 பேரும் அடங்குவர்.சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 842 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து செங்கல்பட்டில் 985 பேருக்கும் கோவையில் 889 பேருக்கும் திருவள்ளூரில் 807 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.. இன்று ஒரே நாளில் 8,078 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 43 ஆயிரத்து 44 ஆக அதிகரித்துள்ளது.