இந்தியா முழுதும் கொரானாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒற்றை நாள் தொற்றின் அளவு மிக அதிகமாக உள்ளது.
சில மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தமிழகத்திலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதில் முதல் கட்டமாக, 10 நாட்களுக்குத் தேவைப்படும் குறைந்தபட்சம் 20 லட்சம் தடுப்பூசிகளையாவது முதலில் விரைவாக அனுப்புமாறும் கடிதத்தில் முதல்வர் பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.