கரோனா பாதிப்பு நிலவரம் – தமிழகம் !

கரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் வீசி வருகிறது.மேலும் அரசு பல்வேறு காட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 10,986 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,13,378 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் சென்னையில் இன்று 3,711 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,90,364 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் இன்று மட்டும் கரோனா பாதித்த 48 பேர் உயிரிழந்துள்ளனர்.