மக்களே உஷார்…தினம் தினம் அதிகமாகும் கரோனா தொற்று எண்ணிக்கை !

தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், படிப்படியாக குறைந்து வந்த தொற்றின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

இன்று 5,989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,26,816ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 1,977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரே நாளில் 1,952 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 76 ஆயிரத்து 257ஆக அதிகரித்துள்ளது.