கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.இதனை தடுக்க தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமலில் வைத்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா தொற்றின் நாள் பாதிப்பு குறைந்து வருகிறது.
தமிழகத்தில் இன்று 1,872 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.மேலும் சென்னையில் 133 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மொத்தம் 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,43,040 ஆகஉள்ளது.குணமடைந்தோர் எண்ணிக்கை 24,83,676. ஆக உள்ளது.இன்றைய கொரோனா தொற்றினால் 29 பேர் உயிரிழந்தனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.