10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட நடிகை !

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குப் தொடர்ந்துள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி தன்னை ஏமாற்றிவிட்டதாக பரபரப்பு புகார் அளித்தார்.புகாரின் அடிப்படியில் கடந்த மாதம் 20-ந்தேதி அவரை கைது செய்தனர்.

இந்நிலையில்,தன்னை மோசடி செய்ததாக கூறி மணிகண்டனிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குப் தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு அடுத்த மாதம் 5ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.