கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் 3570 பேர் பலியாகியுள்ளனர் !

coronavirus
கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

கொரோனா தொற்று கடந்த வருடம் முதல் இன்று வரை தனது பிடியில் உலக மக்களை வைத்துள்ளது.இந்த தொற்று பாதிப்பினால் உலக நாடுகள் போராடி வருகின்றன.மேலும் பல நாடுகளில் இரண்டு ,மூன்று என தொற்றின் அலை பாதிக்கிறது.

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் 3570 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜூலை 22 ம் தேதி மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 70 நாடுகளில் வைரஸ் காரணமாக இந்திய குடிமக்கள் உயிர் இழந்ததாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் சவுதி அரேபியாவில் இறந்துள்ளனர்.

மேலும் 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி 41 லட்சம் இந்தியர்கள் சவுதி அரேபியாவில் வாழ்ந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.