தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதனை தடுக்க தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமலில் வைத்துள்ளது.
தமிழகத்தில் இன்று 1,891 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.சென்னையில் 138 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.
மேலும் இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,41,168 யாகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 24,81,201.மேலும் இன்று கொரோனாவால் 27 பேர் உயிரிழந்தனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.