சீனாவில் பயங்கர கனமழையால் மக்கள் தத்தளிப்பு !

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில்,கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் கைகளின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு மணி நேரத்தில் 20 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது.

அங்கு உள்ள தெருக்கள் எல்லாம் நதி போல காட்சியளிக்கிறது.த கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. சுரங்க ரயில் பாதைக்குள் நீர்புகுந்த நிலையில், இடுப்பளவு நீரில் மக்கள் தத்தளித்தனர்.

இது வரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.