10 மற்றும் 12 ம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கு விரைவில் தேர்வு !

கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.இந்நிலையில்,10 மற்றும் 12ஆம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பொதுத்தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது

மேலும் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 12ஆம் வகுப்பில் 40% மதிப்பெண்கள், 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தனித் தேர்வர்களுக்கு என எந்த ஒரு ஆவணமும் பராமரிக்கப்படாத நிலையில்ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பொதுத்தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.