சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் அதிகம் பாதித்தது.2021, ஜூலை 15-ம் தேதி வரை கொரோனா வில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்பட 921 பேருக்கு பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டத்தின் கீழ் தலா ரூ.50 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது என்று மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

மேலும் பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு எதிராகப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்காக காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த காப்பீடு திட்டம் 2021, ஏப்ரல் 24ம் தேதி முதல் கூடுதலாக 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.