தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

coronavirus
கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் இன்று 1,904 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.சென்னையில் 141 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.

இன்று கொரோனா தொற்றினால் 30 பேர் உயிரிழந்தனர்.இது வரை மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 33,782 ஆக உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.