ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு !

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைகளையும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.மேலும் கடந்த வருடம் இதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை மத்திய அரசு நீட்டித்தது.

தற்போது ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக இணை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதுவரை நாட்டில் 92.8 சதவீத ரேசன் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.