தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் !

மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கும் செயலை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவது குறித்து தொழிற்சங்கங்கள் இன்று அறிவிப்பு வெளியிடுகின்றன.மின்சார வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் துணை மின் நிலையங்களை பராமரிக்கும் பணியை தனியாருக்கு வழங்கும் பணியை தொடங்கி உள்ளது.

இதனால் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன.அதனை கண்டித்து ஏற்கனவே தொழிற்சங்க கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் அடுத்தகட்டமாக மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தொழிற்சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.