100 ஜெலட்டின் குச்சிகளை ரயிலில் கொண்டு சென்ற பெண் !

சென்னை-மங்களூரு ரயிலில் 117 ஜெலெட்டின் குச்சிகள், 350 டெட்டனேட்டர்ஸ் கொண்டு சென்ற பெண் கேரளாவில் காவல் துறையினரால் பிடிபட்டார்.இந்த ரயிலில் வெடிபொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக பாலக்காடு ரயில்வே போலீசாருக்கு முன்பே தகவல் கிடைத்தது.

இது குறித்து போலீசார் விசாரணையில் தெரியவந்தது,அவர் காட்பாடியில் இருந்து தலசேரிக்கு சென்றுள்ளார். தலசேரியில் கிணறு தோண்டுவதற்கு பயன்படுத்துவதற்காக ஜெலெட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டஸ் எடுத்து செல்வதாக ரமணி போலீசாரிடம் தெரிவித்தார்.

கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இந்த வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட பெண்ணின் பெயர் ரமணி மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.